Wednesday, July 15, 2015

கருப்பு தங்கம்

கர்ம வீரரே
கருப்பு தங்கமே
ஆர் எஸ் எஸ் காரனயே
அலறவைத்த சிங்கமே

தேசத்தில் தூயவனாய்
திகட்டாது களமாடி
வாழ்விழந்து நின்றோர்கும்
வறுமையில் உழன்றோர்கும்
கலங்கரை விளக்கானாய்
கரைபடியா சரித்திரமானாய்

கருப்பாய் பிறந்தாலும்
நெருப்பாய் பணி செய்தவனே

மக்களின் தரம் உயர்ந்தால்
மாநிலத்தின் தரம் உயரும்

நீ சிந்தித்து செயல்பட்டதால்
சில அணைக்கட்டுகளை
யாம் பெற்றோம்

படிப்பரிவு உயர்ந்திட்டால்
பலமாகும் எந்தமிழன் வாழவென

நீ சிந்தித்து செயல்பட்டதால்
பஞ்சாயத்துகள் தேறும்
பள்ளிகூடங்கள் யாம் பெற்றோம்

அன்று
கொடுவாளை எடுத்துன்னை
கொலைசெய்ய முயன்றவனே

இன்று
உம் சாதனையை தனதாக்க
உரிமைகோரும் அவலம்

நீ ஜெயித்துவிட்டாய்
எதிரிகளை மட்டுமல்
எங்கள் மனங்களையும்.

I LOVE YOU
I RESPECT YOU
அன்புடன்
எஸ்.ஆதம் பாவா

No comments:

Post a Comment