Wednesday, July 15, 2015

கருப்பு தங்கம்

கர்ம வீரரே
கருப்பு தங்கமே
ஆர் எஸ் எஸ் காரனயே
அலறவைத்த சிங்கமே

தேசத்தில் தூயவனாய்
திகட்டாது களமாடி
வாழ்விழந்து நின்றோர்கும்
வறுமையில் உழன்றோர்கும்
கலங்கரை விளக்கானாய்
கரைபடியா சரித்திரமானாய்

கருப்பாய் பிறந்தாலும்
நெருப்பாய் பணி செய்தவனே

மக்களின் தரம் உயர்ந்தால்
மாநிலத்தின் தரம் உயரும்

நீ சிந்தித்து செயல்பட்டதால்
சில அணைக்கட்டுகளை
யாம் பெற்றோம்

படிப்பரிவு உயர்ந்திட்டால்
பலமாகும் எந்தமிழன் வாழவென

நீ சிந்தித்து செயல்பட்டதால்
பஞ்சாயத்துகள் தேறும்
பள்ளிகூடங்கள் யாம் பெற்றோம்

அன்று
கொடுவாளை எடுத்துன்னை
கொலைசெய்ய முயன்றவனே

இன்று
உம் சாதனையை தனதாக்க
உரிமைகோரும் அவலம்

நீ ஜெயித்துவிட்டாய்
எதிரிகளை மட்டுமல்
எங்கள் மனங்களையும்.

I LOVE YOU
I RESPECT YOU
அன்புடன்
எஸ்.ஆதம் பாவா

Friday, February 13, 2015

இயற்கைக்கு மாறாக ஏன்? இந்த காதலர் தினம்

ஜுலியஸ் சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார்.ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர்.பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார்.
அக்காலாண்டர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதுவே
கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.
தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.

கால  அளவு  என்பது

🕒 மைக்ரோ நொடி
🕚 மில்லிநொடி
🕒 சென்டி  நொடி
🕚நொடி
🕚டெக்கநொடி
⏰நிமிடம்
⏰ஹெக்டே  நொடி
⏰கிலோநொடி
⏰மணி
                                                                                          📰📰நாள்
🎡🎡வாரம்
🌐மெகா  நிமிடம்
📅📅வருடம்                  
என முறைப்படுத்தப்பட்டுள்ளது
இதில் எந்த  அளவுகளில் எதை எடுத்துக்கொண்டாலும்  அனைத்து  நிலையிலும்
யார்  யார்  எல்லாம்  என்னிடம்  அன்பு  கொண்டுள்ளனரோ
அதை விட அவர்களின்பால்  நானும்  பல மடங்கு அன்பு கொணடுள்ளேன்  

அதைப்போலவே

நான்  யார்  மீது அல்லது  எது  மீது
அன்பு  கொண்டுள்ளேனோ அதையும்  பல மடங்கு  அதிகரித்தது  கொண்டு  தான்  இருக்கிறேன்

இது  வெல்லாம்  இயற்கையின்  நிகழ்வாக நிகழ்ந்து  கொண்டு  தான்  இருக்கிறது

அப்படி  இருக்கையில்  நான்  ஏன் ஒரு  குறிப்பிட்ட  நாளை  தேர்ந்தெடுத்து
அன்றைய  தினத்தை  மட்டும் அன்பர்கள்  தினம்  (valentine's day) என  பெயரிட்டு
அன்றைய  ஒரு  தினத்தில்  மட்டும்  சொயற்கையாக  அன்பைச்சொலுத்த  முற்பட  வேண்டும்
ஆகையால்
அன்பர்கள்  தினம் என ஒரு தினத்தன்று  மட்டும்  அன்பை  சொயற்கையாக  செலுத்தி  அதை கொண்டாடுவதை  எனது    சிற்றறிவு ஏற்க  மறுக்கிறு
ஆகையால்
No valentines  day


Friday, December 2, 2011

'என் மகள்களின் மூன்று கேள்விகள்'

நான் நெட்டில் படித்ததை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் 






நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.


தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன


'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.



மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன். 


இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
  • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
  • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
  • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'. 

'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."



சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk. link

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. லிங்க்

Sunday, December 26, 2010

ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

 

நன்றி:


 

Sunday, December 19, 2010

கஷ்மீர்: இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளாலும் கரைபடுதப்படும் தேசம்

நாடு பிடிக்கும் இரண்டு தேசங்களால் வஞ்சிக்கப்பட்டு நசுக்கப்படும் காஷ்மீர் மக்களில் அவலம் எப்போது நீங்குமோ..?

என ஏக்கத்தோடு நான் படித்த இந்த விடயங்களை அப்படியே நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்

ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்பு 86 ,000௦௦௦(எண்பத்து ஆறு ஆயிராம் சதுர மைல்கள்.

மக்கள் தொகை கணக்கின்படி  காஷ்மீரில் ஏறாத்தாலே 10 மில்லியன் பேர் வசிக்கின்றார்கள்.

காஷ்மீரை மூன்று பிராந்தியங்களாக பிரிக்காலாம்.

1) காஷ்மீர் பள்ளத்தாக்கு

2) ஜம்மு பிராந்தியம் (கில்ஜிட்,லடாக், அடங்கிய வடக்குபிராந்தியம்)

3 ) இயற்கை எழில் கொண்ட காஷ்மீர் பள்ளதாக்கில் சரித்திரதொன்மை கொண்ட ஸ்ரீநகர் அமைந்துள்ளது இந்நகரின் மையப்பகுதி ஏனய இரு பிராந்தியங்களின் நடுவே அமைந்துள்ளது.

வராலற்றுப்பின்னணி

காஷ்மீரின் சோதனைக்காலம்,

1819 -ல் முஸ்லிம் ஆட்சி முடிவுற்று சீக்கியர்களின் ஆட்சி தொடங்கிய போதே
ஆரம்ம்பித்துவிட்டது.வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனியினர் போர்ப்பினையாக காஷ்மீரை,சீக்கியர்களின் இராணுவ தளபதியான குலாப் சிங்கிடம்மிருந்து 7 .5 மில்லியன் ரூபாய்க்கு (சுமார் 300 000 டாலர்கள்) அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின்படி 1846 -ல் வாங்கும்போது காஷ்மீரின் நாட்கள் இன்னும் இருண்டவைகளாக மாறிவிட்டன.

ஒப்பந்தம் என்ற மட்டும்மளவில் இல்லாமல் ,விற்பனை பத்திரம் என்றும் அமிர்தசரஸ் உடன்படிக்கை வரையறுக்கப்பட்டது.

இதன் காரணமாக நிராதரவான காஷ்மீரிகள் நிலம்,பயிர்கள்,ஓடைகள் மற்றும் இன்ன பிறவற்றுடன் சேர்த்தே விற்கப்பட்டனர்.(எவ்வளவு மலிவான விற்பனை இது? பவம் காஷ்மீரிகள்)
1846 ஐ அடுத்து நூறு வருடங்களாக காஷ்மீரிகள்,முக்கியமாக முஸ்லிம்கள் ஆயிரகானக்கில் கொல்லப்படுகின்றனர்.பெருந்துயரமாக அவரிகளின் மத உரிமைகள் மறுக்கப்பட்டு,அவர்கள் மீது கடுமையான வரிகள் (taxes ) சுமத்தப்பட்டன.

மகாராஜா ஹரிசிங் சொந்த குடிமக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்.
பின்னர் 1930 -ல் காஷ்மீர் குடிமக்கள் எதிர்க்க ஆராம்பித்துவிட்டனர்.இது ஒட்டுமொத்தமான மக்கள் எழுச்சியாகும்
அடக்குமுறை போருக்க முடியாமல் 1931 -ல் ஷேக்அப்துல்லாவின் (இன்றைய காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாவின் பாட்டனார்)தலைமையில் மக்கள் எழுந்தனர்.

அதே கால கட்டத்தில் இந்தியாவில் காந்தி தலைமையிலும் விடுதலைக்கான போராட்டங்கள் நாடைபெற்றுக்கொண்டு இருந்தன ஒரே வித்தியாசம் இங்கே வெள்ளையனே வெளியேறு என்கிற கோஷமும் அங்கே காஷ்மீரை விட்டு வெளியேறு கோஷமும் மேலோங்கி இருந்தது.

1947 -ல் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிந்து கஷ்மீரைப்பார்த்து, "நீ யாருடன் வருவாய்? "என்கிற ரீதியில் கேட்டானர்

 மகராஜா ஹரிசிங் அவர்களோ நான் யாருடனும் இல்லை என ஜகா வாங்கி காஷ்மீரை தொடர்ந்து தனி நாடாகவே நடத்தினார் திடீரென 1947 அக்டோபர் 22 -ல் பாகிஸ்தான் இராணுவத்தின் North West Frontier Province என்கிற ராணுவதுருப்பு பஷ்தூன் ஆப்கானி என்கிற பழங்குடியினருடன் சேர்ந்து காஷ்மீர் மீது படை எடுத்தது.

இந்த திடீர் படையெடுப்பை கண்டு அதிர்ச்சி அடைந்த மகராஜா உடனடியாக உதவிக்குவரவும் என அப்போதைய இந்தியா பிரதமர் நேருவுக்கு தகவல் அனுப்பினார்.
காஷ்மீர் வரலாற்றின் நெருக்கடிமிக்க நிகழ்வுகள்

25 .10 .1947
கடைசி ஹிந்து டோக்கர ஆட்சியாளரான மகாராஜா ஹரிசிங் ஸ்ரீநகரை விட்டு ஓடிவிடுகிறார்
26 .10.1947
ஓடிப்போகும் மன்னரிடம் இந்தியா பிரதிநிதி வி.பி.மேனன் ஜம்முவில் வைத்து 'இணைப்பு பத்திரம்' என்றழைக்கப்பட்ட தஸ்தாவேஜில் கைஎளுத்துப்பெருகிறார்.
27 .10 .1947
மகாராஜாவின் வேன்றுகோளை ஏற்று உடனடியாக இந்தியா ராணுவம் காஷ்மீருக்கு போக நேரு உத்தரவு இட்டார் அங்கே இரு படைகளுக்கும் உக்கிரகமாக போர் நடைப்பெற்றது பஞ்சாயத்துக்கு ஐ நா சபை வந்தாது இரு பாடியக்களும் போர் நிறுத்த ஒப்பந்தாம் செய்ததன
01 01 1948 .
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐ நா வில் புகார் செய்தது
15 01 1948 .
பாகிஸ்தானும் பதில் கூறுகிறது 9 மதாங்கள் இது குறித்து நீண்ட விவாதங்கள் நடத்தப்படுகின்றன

13 .08 .1948 -15 .01 .1949

ஐ நா வின் பாதுகாப்பு கவுன்சில் பகைமைகளை முடிவுக்கு கொண்டு வருமாறும் அதன் பின் இனைப்புக்குறித்து

 சுதந்திரமான,நியாயமான,சுயநிர்ணயகருத்து கணிப்பு (plebiscite )நடத்தப்பெற்று அதனடிப்படியில் இணைப்புபற்றி முடிவெடுக்கவேண்டும் என இரு தீர்மானங்களை நிறைவேற்றியது. அதாவது "காஷ்மீர் யாருடன் ?"என்று முடிவுசெய்யும் அதிகாரத்தை காஷ்மீர் மக்களுக்கே ஐ நா வழங்கியது.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வரியை கண்டுகொள்ளாத பாகிஸ்தான் தான் வசம் வந்த காஷ்மீரின் ஒரு பகுதியை தான் நிர்வாகத்தில் சேர்த்துக்கொண்டு அதற்க்கு "ஆஷாத் காஷ்மீர்' என்று பெயர் சூட்டியது


தனக்கு கிடைத்த பகுதியை இன்று வரையில் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது இந்தியா அரசாங்கம்.

நடுவில் இருதலைக்கொள்ளியாக இன்று வரை தவித்துக்கொண்டு இருப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரிய அந்த கஷ்மீர் அப்பாவி மக்கள்.

நன்றி: விடியல் வெள்ளி மாத இதழ் 11 .09 .2010

Monday, November 29, 2010

விடியலைத்தேடி: புகை நாமக்கு பகை

விடியலைத்தேடி: புகை நாமக்கு பகை

புகை நாமக்கு பகை

இந்த உலகத்தில் கோடான கோடி படைப்பினங்களை படைக்கப்பட்டிருக்கின்றன  அது எல்லாமே மனித இனத்தின்  பயன்பாட்டிற்க்காகதான். 

மனிதனும் எல்லாவற்றையும்  பயன்படுத்தி  அதன் பயனை அடைந்துகொண்டுதான் இருக்கிறான்

நல்லவையும் தீயவையும் மனிதனின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது  
 
அதில் எது நல்லது, எது தீயது என தேர்ந்தெடுக்கும் உரிமையும் அதற்கான அறிவும் நமக்கு வழங்கப்பட்டிருகிறது
அதைதான் அறிவியல் உலகம் பகுத்தறிவு என்கிறது சரி இந்த பகுத்தறிவை மனித இனம் சரியாக பயன்படுதுகிறதா? என ஒரு வினா எழுப்புவோமேயானால் ஆம் சரியாகத்தான் பயன் படுத்துகிறோம் என்றுதான் பதில் வரும்,
 
ஆனால் இந்த பகுத்தறிவுக்கு  ஒவ்வாத  பல செயல்களை நாம் செய்துகொண்டே தான் இந்த பதிலை தருகிறோம், உதாரணமாக  
 
மனித இனத்தை மதி இழக்க செய்யும் வெறியேறிய காமம், குரோதம், பணபித்து, பதவிமோகம், போதை, போன்றவற்றை சொல்லலாம் இதில் நான் கூறிய எல்லாமே மனித இனத்திற்கு ஆபத்தானதுதான் 
இதில் நான் இறுதியாக  சொன்ன போதை என்பது எல்லா   தவறுகளுக்கும்  முதன்மையானது என்பது  நாம் பகுத்தறிவுக்கு தெரிந்தும் 
நாம் போதைக்கு அடிமை ஆகிறோம் என்பதுதான் வேதனையான விடயம்.
 
போதையில் எத்தனையோ வகை இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் அமைதியாக பெரும் இழப்பை ஏற்ப்படுத்துவது லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுவதும் மரணம் அடைவதும்  புகைப்பிடிக்கும் பழக்கத்தாலேயே
 
இதனால் தான் இதயம்  சம்மந்த பட்ட நோய்களும் புற்றுநோயும் அதிகம் ஏற்ப்படுவதாக மருத்துவர்கள் நமக்குசொல்கிறார்கள்.
 
இந்த விடயத்தில் நாமும் கெட்டு  பிறரையும் கெடுக்கிறோம் இதோ சமீபதில் வெளியான ஒரு ஆய்வு ஒன்றை படிதுப்பாருங்கள்
 
 
 2004-ம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
 
இவ்வாறு இறப்பவர்களில் இது உலக அளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன் தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் இருக்கும் போதே பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த புகை குழந்தையை பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்து செல்கிறது. காதுகளில் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக் கொள்கின்றன. எனவே, குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.       (நன்றி தமிழ் சி என் என்.கம்)      
 
இது ஒருபுறம் இருக்க 
நாம் நமை எவ்வாறு பாழ்படுதிக்கொள்கிறோம்   என்பதயும் பார்ப்போம்
நாம் இந்த பூமியில் உயிர் வாழ சுவாசிப்புதிறன்  மிக முக்கியம் அப்போதுதான் நாம் ஆக்சிஜனை சுவாசித்து கார்ப்பண்டை ஆக்சைடை வெளியேற்றமுடியும் இதற்க்கு முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சுவாசமண்டலம்
 
சுவாசமண்டலம்
 
சுவாசமண்டலம் என்பது மூச்சுக்குழல்,நூரையீரல்,காற்றுணுண்ணறைகள்,மூச்சுத்துளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம் இனி  எவ்வாறு சுவாசம் நடைபெருகிறது என்பதை பார்ப்போம்
 
உத்திரவிதானம் எனும் உறுப்பு சுருங்கி விரியும்போது சுவாசம் நடைபெறுகிறது
உத்திரவிதானம் சுருங்கும்போது ஆக்சிஜன் உள்ளிளுக்கப்படுகிறது அது விரிவடையும்போது உள்ளே உள்ள கார்பன்டை ஆக்சைடு வெளி ஏற்றப்படுகிறது 
 
நான் மேலே சொன்ன நுரையீரல் என்ற உறுப்பில் 30ஆயிரம் சிறு மூசுக்குழல்கள் உள்ளன 
600  மில்லியன் காற்று நுண்ணறைகள்  உள்ளன  
 
நுரையீரல் வலது  இடது என இரண்டுவகையாக பார்க்கப்படுகிறது இதில் வலது பகுதி நுரையீரல் 620 .கிராம் எதையும் இடது நுரையீரல் 560 ,கிராம் எதையும் உள்ளது 
இந்த நுரையீரலுக்கென தனியாக தசைகள் ஏதும் இல்லை மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகின்றன 
 
சுவாசம் நடைபெறும்போது  உள்ளே சென்று வெளியே வரும் காற்றின் அளவை கணக்கிட   மருத்துவ உலகம் இஸ்பைரோ  மீட்டார் எனும் கருவியை பயன்படுத்துகிறார்கள்
 
ஒரு ஒரு சுவாசத்தின் போதும் 1 /2  (அரை)  லிட்டர் காற்று உள்ளே போகிறது
 
நுரையீரல் முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.
 
நுரையீரல் தான் கடமையை செய்வதை நாம் புகைப்பிடிப்பதன் மூலம் தடுக்கிறோம்
 
 
நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகை பிடித்தலால்  நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகிய நோய்களுக்கு நாமே  காரணம் ஆகிறோம்

ஒன்றை மாட்டும் நாம் மறந்துவிடக்கூடாது நீர், உணவு, இல்லாமல் கூட சிலநாட்கள் உயிர் வாழலாம் ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் மனிதனால் 3  நிமிடங்களுக்கு மேல்  உயிர் வாழ முடியாது 


ஆக 

 ஆதலால் புகையே  நாமக்கு பகை என்பதை மனதில் கொண்டு
  
புகைப்பழக்கம் இல்லாதோர் இனி வாழ்வில் இந்த பழக்கத்திற்கு இடமே இல்லை என சபதம் ஏற்ப்போம்

புகைப்பழக்கம் இருப்போர் இதை விட்டொழிக்க சபதம் ஏற்கலாமே.....
 
 
 சிகிரட்டின் நுனியில் எரியும் சிகப்பு நெருப்பு என்பது நாம்  நோய் எனும் எமனுக்கு காட்டும் கலங்கரை விளக்கு போல் ஆகிவிடுகிறது