இந்த உலகத்தில் கோடான கோடி படைப்பினங்களை படைக்கப்பட்டிருக்கின்றன அது எல்லாமே மனித இனத்தின் பயன்பாட்டிற்க்காகதான்.
மனிதனும் எல்லாவற்றையும் பயன்படுத்தி அதன் பயனை அடைந்துகொண்டுதான் இருக்கிறான்
நல்லவையும் தீயவையும் மனிதனின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது
அதில் எது நல்லது, எது தீயது என தேர்ந்தெடுக்கும் உரிமையும் அதற்கான அறிவும் நமக்கு வழங்கப்பட்டிருகிறது
அதைதான் அறிவியல் உலகம் பகுத்தறிவு என்கிறது சரி இந்த பகுத்தறிவை மனித இனம் சரியாக பயன்படுதுகிறதா? என ஒரு வினா எழுப்புவோமேயானால் ஆம் சரியாகத்தான் பயன் படுத்துகிறோம் என்றுதான் பதில் வரும்,
ஆனால் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல செயல்களை நாம் செய்துகொண்டே தான் இந்த பதிலை தருகிறோம், உதாரணமாக
மனித இனத்தை மதி இழக்க செய்யும் வெறியேறிய காமம், குரோதம், பணபித்து, பதவிமோகம், போதை, போன்றவற்றை சொல்லலாம் இதில் நான் கூறிய எல்லாமே மனித இனத்திற்கு ஆபத்தானதுதான்
இதில் நான் இறுதியாக சொன்ன போதை என்பது எல்லா தவறுகளுக்கும் முதன்மையானது என்பது நாம் பகுத்தறிவுக்கு தெரிந்தும்
நாம் போதைக்கு அடிமை ஆகிறோம் என்பதுதான் வேதனையான விடயம்.
போதையில் எத்தனையோ வகை இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் அமைதியாக பெரும் இழப்பை ஏற்ப்படுத்துவது லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுவதும் மரணம் அடைவதும் புகைப்பிடிக்கும் பழக்கத்தாலேயே
இதனால் தான் இதயம் சம்மந்த பட்ட நோய்களும் புற்றுநோயும் அதிகம் ஏற்ப்படுவதாக மருத்துவர்கள் நமக்குசொல்கிறார்கள்.
இந்த விடயத்தில் நாமும் கெட்டு பிறரையும் கெடுக்கிறோம் இதோ சமீபதில் வெளியான ஒரு ஆய்வு ஒன்றை படிதுப்பாருங்கள்
2004-ம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
இவ்வாறு இறப்பவர்களில் இது உலக அளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன் தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் இருக்கும் போதே பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த புகை குழந்தையை பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்து செல்கிறது. காதுகளில் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக் கொள்கின்றன. எனவே, குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். (நன்றி தமிழ் சி என் என்.கம்)
இது ஒருபுறம் இருக்க
நாம் நமை எவ்வாறு பாழ்படுதிக்கொள்கிறோம் என்பதயும் பார்ப்போம்
நாம் இந்த பூமியில் உயிர் வாழ சுவாசிப்புதிறன் மிக முக்கியம் அப்போதுதான் நாம் ஆக்சிஜனை சுவாசித்து கார்ப்பண்டை ஆக்சைடை வெளியேற்றமுடியும் இதற்க்கு முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சுவாசமண்டலம்
சுவாசமண்டலம்
சுவாசமண்டலம் என்பது மூச்சுக்குழல்,நூரையீரல்,காற்றுணுண்ணறைகள்,மூச்சுத்துளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம் இனி எவ்வாறு சுவாசம் நடைபெருகிறது என்பதை பார்ப்போம்
உத்திரவிதானம் எனும் உறுப்பு சுருங்கி விரியும்போது சுவாசம் நடைபெறுகிறது
உத்திரவிதானம் சுருங்கும்போது ஆக்சிஜன் உள்ளிளுக்கப்படுகிறது அது விரிவடையும்போது உள்ளே உள்ள கார்பன்டை ஆக்சைடு வெளி ஏற்றப்படுகிறது
நான் மேலே சொன்ன நுரையீரல் என்ற உறுப்பில் 30ஆயிரம் சிறு மூசுக்குழல்கள் உள்ளன
600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன
நுரையீரல் வலது இடது என இரண்டுவகையாக பார்க்கப்படுகிறது இதில் வலது பகுதி நுரையீரல் 620 .கிராம் எதையும் இடது நுரையீரல் 560 ,கிராம் எதையும் உள்ளது
இந்த நுரையீரலுக்கென தனியாக தசைகள் ஏதும் இல்லை மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகின்றன
சுவாசம் நடைபெறும்போது உள்ளே சென்று வெளியே வரும் காற்றின் அளவை கணக்கிட மருத்துவ உலகம் இஸ்பைரோ மீட்டார் எனும் கருவியை பயன்படுத்துகிறார்கள்
ஒரு ஒரு சுவாசத்தின் போதும் 1 /2 (அரை) லிட்டர் காற்று உள்ளே போகிறது
நுரையீரல் முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.
நுரையீரல் தான் கடமையை செய்வதை நாம் புகைப்பிடிப்பதன் மூலம் தடுக்கிறோம்
நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகை பிடித்தலால் நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகிய நோய்களுக்கு நாமே காரணம் ஆகிறோம்
ஒன்றை மாட்டும் நாம் மறந்துவிடக்கூடாது நீர், உணவு, இல்லாமல் கூட சிலநாட்கள் உயிர் வாழலாம் ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் மனிதனால் 3 நிமிடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது
ஆக
ஆதலால் புகையே நாமக்கு பகை என்பதை மனதில் கொண்டு
புகைப்பழக்கம் இல்லாதோர் இனி வாழ்வில் இந்த பழக்கத்திற்கு இடமே இல்லை என சபதம் ஏற்ப்போம்
புகைப்பழக்கம் இருப்போர் இதை விட்டொழிக்க சபதம் ஏற்கலாமே.....
சிகிரட்டின் நுனியில் எரியும் சிகப்பு நெருப்பு என்பது நாம் நோய் எனும் எமனுக்கு காட்டும் கலங்கரை விளக்கு போல் ஆகிவிடுகிறது